வரி விலக்கை பெற்றுத் தரும் அஞ்சலகத்தின் சூப்பர் திட்டம் – நீங்களும் பயனடைய இப்போவே ஃபாலோ பண்ணுங்க!
மக்கள் மிகவும் பாதுகாப்பான வகையிலான சேமிப்புகளுக்கு அதிக, முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், அஞ்சலகம் மக்களுக்கான பல நல்ல பலனுள்ள சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.
சேமிப்பு திட்டம்:
மக்களுக்கு சேமிப்பு என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தியதன் முக்கிய பங்கு கொரோனா கால ஊரடங்கையே சேரும். தினசரி அன்றாட வாழ்க்கையை மட்டுமே யோசித்து, பிற்காலத்தை பற்றிய சிந்தனையே இல்லாமல் மக்கள் ஓடி வந்த நேரத்தில், அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது கொரோனா ஊரடங்கு. இதனால் மக்கள் இனி வருங்காலத்தில் கண்டிப்பாக சேமிப்பை தொடங்க வேண்டும் என்று உறுதி கொண்டனர். அதேநேரம், தங்களின் சேமிப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தனர்.
நாட்டிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணம் – அமல்படுத்திய மாநிலம்!
இதனால் அதிக அளவிலான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களை நோக்கி படை எடுத்தனர். குறிப்பாக, அஞ்சலகங்களில் மக்களுக்கு அதிக பயனளிக்க கூடிய வகையில் பல திட்டங்கள் உள்ளது. அதில், சிலவற்றில் வரி விலக்கு வசதியும் உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் மக்கள் குறைவான முதலீட்டில் அதிக லாபத்தை பெரும் வகையில் உள்ளது. இந்த திட்டத்தில் 7.1 % வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
Exams Daily Mobile App Download
பயனர்கள் விருப்பப்பட்டால் மேலும் 5 ஆண்டுகள் கூட திட்டத்தில் தொகையை வைத்துக் கொள்ளலாம். தினமும் ரூ.100 ஐ நாம் 25 ஆண்டுகளுக்கு சேமிக்கும் பட்சத்தில் மொத்தமாக ஆண்டுக்கு ரூ.36,500 வீதம், 15 ஆண்டுகள் முடிவில் ரூ.9.89 கிடைக்கும். இதுவே 25 ஆண்டுகள் முடிவில் வட்டியுடன் சேர்த்து மொத்தமாக ரூ.25 லட்சமாக கிடைக்கும். குறிப்பாக, நீண்ட கால வைப்பு திட்டத்தில் வரி விலக்கும் அளிக்கப்படுவதால் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்