நாட்டிலேயே முதல்முறையாக தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணம் – அமல்படுத்திய மாநிலம்!
இந்தியாவில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் லாப நோக்கத்துடன் செயல்படுவதை தடுக்கும் வகையில், நீதிமன்றம் பிறப்பித்த அரசு நிர்ணயித்த கட்டண முறை முதல் முறையாக குறிப்பிட்ட மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரி:
இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கான செலவுகள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சற்று அதிக அளவிலேயே உள்ளது. இதனால் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் பலரும் நமது அண்டை நாடுகளில் சென்று மருத்துவம் படித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இந்தியாவில் நேரடியாக மருத்துவ பணிகளை தொடர முடியாது. இதற்காக பல கட்டுப்பாடுகள் உள்ளது. இதனை தவிர்ப்பதற்காகமாணவர்கள் அதிக அளவில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேருகின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிக கட்டணத்தை வசூலிக்கின்றன.
இதனால் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் லாப நோக்கத்தையோடு செயல்படுவதை தவிர்க்கவேண்டும் என்று பல காலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனால், தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில், மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள இடங்களில் 50% மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தேசிய பென்சன் திட்டத்தில் புதிய விதிமுறைகள் அறிவிப்பு – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பிற்கு, தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. இது தொடர்பாக, வழக்குகளும் தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த அறிவிப்பை எந்த மாநிலத்திலும் இன்னும் அமல்படுத்த தொடங்க வில்லை என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ படிப்பிற்கான எண்ணிக்கையில் 50% அளவிற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மத்தியபிரதேச மாநிலம் முதன்முறையாக அமல்படுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்