தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் அறிவுறுத்தல்!
தமிழக அரசு மகளிர் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் முயற்சிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விழுப்புரம் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்ட புதிய திட்டத்தில் அமைச்சர் பொன்முடி அவர்கள் உரையாற்றியுள்ளார்.
நியாய விலைக்கடை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. இவை அனைத்தும் வார்த்தைகளாக மட்டும் இல்லாமல் தமிழகத்தின் கடை கோடி மக்கள் வரை அனைவருக்கும் அரசின் திட்டம் கிடைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கூடுதலாக அமைச்சர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் நலத்திட்ட பணிகளை தானே நேரடியாக கண்காணிக்க இருப்பதாகவும், இதனால் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், புதிதாக தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நியாய விலை கடைகள் தொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பிரேக் எடுத்த நடிகை சுஜிதா – சொந்த ஊர் விசிட்!
மாநிலங்களவை உறுப்பினர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட நகராட்சிக்கு உட்பட்ட சாலாமேடு ஈபி காலனி மற்றும் ராகவன் பேட்டை திருநகர் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்திடும் பகுதி நேர நியாய விலை கடைகள் அமைச்சர் பொன்முடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் மோகன், எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபாகரன், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, கோட்டாட்சியர் ஹரிதாஸ், துணை பதிவாளர் நளினா ஆகியோர் கலந்து கொண்டனர்.
2021 பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இந்திய மங்கை – 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெற்றி!
அதன்பிறகு அமைச்சர் உரையாற்றியுள்ளார். அப்போது, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடந்திடும் நியாய விலைக்கடைகள் மிகவும் நியாயமாகவும், பொறுப்புடனும் நடக்கும். நியாய விலை கடையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் சரியான நேரத்தில் சரியான அளவில் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு, 3,150 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி விழுப்புரம், வானூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் சார்பில் நடைபெற்றது. அதன்பிறகு, 2,047 பயனாளிகளுக்கு ரூ30.38 கோடி மதிப்பீட்டில் வானூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.