தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மே 31 கடைசி நாள்!
தமிழகத்தில் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்தும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தொகை பெற விரும்புபவர்கள் மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை:
தமிழகத்தில் அரசு பணிகளில் சேர விரும்புபவர்கள் தங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியம். கடந்த காலங்களில் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்வார்கள். தற்போது 10, 12ம் வகுப்பு முடித்தவுடன் அந்தந்த பள்ளிகள் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு இந்த வேலை வாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்வது அவசியமாகும். இதன் மூலம் அரசு பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் சிரமப்படும் மக்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பை பதிவு செய்தும் அதனை தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் உள்ளவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ESIC நிறுவனத்தில் 45 காலிப்பணியிடங்கள் – ரூ.2,40,000/- வரை ஊதியம்..!
இதனையடுத்து உதவித்தொகை பெற விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகல், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் நகல்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு செய்து 1 ஆண்டுகள் ஆகியிருந்தால் போதுமானது.