தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு சூப்பர் அறிவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த வேலைவாய்ப்பு முகாம் இனி இரு வாரங்களுக்கு ஒரு முறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வழக்கமாக மாவட்ட அரசு வேலைவாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக அவ்வப்போது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும். இந்த கொரோனா தாக்கத்தால் கடந்த 2 வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா பரவல் நேரத்தில் மக்கள் கூட்டத்தை குறைக்க இந்த முகாம்கள் நடைபெற அரசு அனுமதி அளிக்கப்படவில்லை. அதன் பிறகு அரசின் தடுப்பு பணிகளால் பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலை நோக்கி திரும்பி வருவதால் மக்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் வாரம் அல்லது மாதந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனால் ஊரடங்கில் வேலை இழந்தோர் மீண்டும் வேலைவாய்ப்பை பெற்று பயனடைந்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து ராமநாதபுர மாவட்டத்தில் வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டதாரி மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இவர்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்புகளை வழங்கினர்.
குடும்பத்தினரின் முன்னிலையில் உண்மையை கூறிவிடும் மூர்த்தி – கோபியை திட்டி தீர்த்த பாக்கியா!
வாரந்தோறும் நடைபெற்று வரும் இந்த வேலைவாய்ப்பு முகாம் இனி இரு வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரந்தோறும் வெள்ளி கிழமையில் முகாம் நடத்தப்பட்டு வந்தது. வாரந்தோறும் நடைபெறுவதால் நிறுவனங்கள், வேலை நாடுநர்கள் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். அதனால் இனி இரு வாரங்களுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் அடுத்த வாரம் (மே 27) வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.