தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு! கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை நாம் பயன்படுத்தினாலோ அல்லது அவர்களது கண்களை பார்த்தாலோ கண் நோய் ஏற்படும். இந்நோயின் பரவல் வேகம் தற்போது தீவிரமடைந்துள்ளதால் அதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு விடுமுறை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழை காலம் என்பதால் பருவ நிலை மாற்றத்தால் மக்களுக்கு பல நோய்கள் உண்டாகிறது. அதில் ஒன்று தான் கண் நோய். தமிழகத்தில் மெட்ராஸ் ஐ என்று சொல்லப்படும் இந்த கண் நோய் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. கடந்த ஒரு மாதங்களாக சென்னை புறநகர் பகுதிகளில் மக்கள் கண் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
நாள் தோறும் சராசரியாக 50 நோயாளிகள் கண் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம். மேலும் மருத்துவரின் அறிவுரையின் படி கண்களை சுத்தப்படுத்த வேண்டும். பிறர் பார்க்காத வண்ணம் கண்களை மூடி வைப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் கனமழை எதிரொலி – மாவட்ட நிர்வாகங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
தற்போது சென்னையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ என்றழைக்கப்படும் கண் நோயால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் தோறும் 100 முதல் 120 பேர் வரை மருத்துவமனையில் சிகிக்சைக்காக வருகின்றனர். இந்நோய் எளிதில் மற்றவருக்கும் பரவும் என்பதால் மெட்ராஸ் ஐ பாதிப்புடன் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.