தமிழகத்தில் கனமழை எதிரொலி – மாவட்ட நிர்வாகங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதனால் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவு:
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நவம்பர் டிசம்பர் மாதங்களில் தமிழகம் முழுவதும் அதிக மழை பெய்யும். அந்த வகையில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த வாரம் பெய்த மழையால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. ஆனால் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருந்ததால் சேதாரங்கள் தவிர்க்கப்பட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில் தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் நவம்பர் 20, 21, 22 ஆகிய 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சரிவை கண்ட தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் – இன்றைய நிலவரம்!
Exams Daily Mobile App Download
அதனால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு பெய்ய இருக்கும் கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நோய் தொற்று ஏற்பட பாதிப்புகள் இருப்பதால் சுகாதாரத்துறையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.