TCS நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 8% சதவீத ஊழியர்கள் அலுவலகம் வர உத்தரவு!
TCS நிறுவன ஊழியர்கள் கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் இருந்து வீட்டில் இருந்து பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஊழியர்களை அலுவலகத்திற்கு வருமாறு அந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
ஊழியர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் கொரோனா கால கட்டத்திலும் ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் வீட்டில் இருந்து பணி புரிந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் சில ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் ஊழியர்கள் 2 வருடத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து பணி புரிந்து வருவதால் அதனை விரும்புகின்றனர்.
Post Office இல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.5,000 வரை வருமானம் தரும் அசத்தல் திட்டம்!
அதனால் அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்தால் பெரும்பாலான ஊழியர்கள் தங்களின் வேலைகளை ராஜினாமா செய்யக்கூட தயாராக உள்ளனர். இந்த நிலையில் TCS முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது, TCS நிறுவன உயர் அதிகாரிகளை மட்டும் அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுப்பதாக அறிவித்துள்ளனர். அதாவது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 8% பேர் மட்டும் வாரத்திற்கு 3 நாட்கள் வரை அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் மற்ற 2 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி TCS நிறுவனத்தில் உள்ள 6 லட்சம் ஊழியர்களில் 50000 ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர உள்ளனர். அதனால் மற்ற 5.5 லட்சம் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது உறுதியாகியுள்ளது. ஆனால் இனி வரும் காலங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு அலுவலகத்திற்கு வரவழைக்கப்படுவார்கள் என்று TCS நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து TCS நிறுவன ஊழியர்களின் சம்பள உயர்வு கடந்த ஆண்டை விட சராசரியாக 6 முதல் 8% வரை சம்பள உயர்வு அளிக்கப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.