தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் வெளியிட்ட உத்தரவு!
சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இவ்வகுப்பறையை திறந்து வைத்தார்.
ஸ்மார்ட் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைகளுக்கு பிறகு தற்போது தான் பள்ளிகளில் வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதையடுத்து கடந்த மாதம் தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. மேலும் 1 – 12 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பாடவாரியான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் வண்ணம் இரண்டாம் திருப்புதல் தேர்வு இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வெளியாகுமா அறிவிப்பு?
ஏற்கனவே கடந்த மாதம் முதல் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்று வரும் தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பெற்ற நாள் முதல் கல்வித்துறையில் முழுக் கவனம் செலுத்தி வருகிறது. அரசு அறிவித்துள்ள திட்டங்கள் மற்றும் வழங்கி வரும் சலுகைகளால் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 7000 காலிப்பணியிடங்கள்..!
இந்த நிலையில் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இந்த ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளை தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் வசதிகள் மற்றும் கற்பிக்கும் தன்மை அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.