தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வெளியாகுமா அறிவிப்பு?
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு முதலான 12 கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கிறதா என விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலைநிறுத்தப் போராட்டம்:
மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் போராட்டம் நடத்தவுள்ளனர். இந்த போராட்டத்தில் போக்குவரத்து, மின் துறை, வங்கி, காப்பீடு துறை பணியாளர்கள் என 20 கோடி பேர் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இந்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தமிழக அரசு இரண்டு நாட்கள் சம்பளம் பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஊக்குவிப்பது போல இருக்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு மே 21 முதல் கோடை விடுமுறை துவக்கம் – அரசு முக்கிய அறிவிப்பு!
ஊழியர்கள் தங்களது உரிமைக்காக போராடுகிறார்கள். அப்படி இருக்கும் போது ஊழியர்களின் இரண்டு நாள் சம்பளத்தை பிடிப்பது எந்த வகையில் நியாயம் எனவும் கேட்டுள்ளார். மேலும், மத்திய அரசுக்கு மறைமுகமாக எதிர்ப்பும் நேரடியாக ஆதரவும் தமிழக அரசு அளிக்கிறது எனவும் குற்றச்சாட்டியுள்ளார். மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கிறதா இல்லையா என்பதை முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் விஜயகாந்த் டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.