தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு திடீர் அறிவிப்பு!

0
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அரசு திடீர் அறிவிப்பு!
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அரசு திடீர் அறிவிப்பு!
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு திடீர் அறிவிப்பு!

தமிழக கூட்டுறவு துறையின் கீழ் பல ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. மாதந்தோறும் மலிவு விலையில் ரேஷன் பொருள்கள் விற்கப்படும் நிலையில், பொருள்கள் வாங்காதவர்களுக்கு கார்டு ரத்து செய்யப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கடைகள்:

தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கி வருகிறது. மேலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. அதனால் மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ரேஷன் பொருள்களை வாங்கி கொள்ளலாம்.

ஆனால் ஒரு சிலர் மாத கணக்கில் ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்காமல் இருக்கின்றனர். அதனால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்ற செய்தி பரவி வருகிறது. மேலும் தேவையானவர்களுக்கு பொருள்கள் கிடைக்காமல் முறைகேடாக கள்ளச்சந்தையில் பொருள்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. அரசு இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல், பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – சுகாதாரத்துறையின் ஷாக் ரிப்போர்ட்!

Exams Daily Mobile App Download

மேலும் ரேஷன் கார்டுதாரர்கள் 3 மாதங்களுக்கு மேல் பொருள்கள் வாங்காமல் இருந்தாலும் அவர்களின் கார்டு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பொருள்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக மக்களுக்கு அந்த நிலைமை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் பொருள்கள் தேவை இல்லாதவர்கள் தாங்களாக முன்வந்து ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தேவை இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்காமல் தேவையானவர்களுக்கு கிடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!