இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – சுகாதாரத்துறையின் ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 5,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை. தற்போது வரை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸ் தொற்றை ஒழிக்கும் முயற்சியாக இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த தடுப்பூசியானது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றிலிருந்து உடலை பாதுகாக்கிறது.
அதனால் மக்கள் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. அத்துடன் தினந்தோறும் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு, குணமடைந்தோர் விகிதம் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி சுமார் 5,443 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வர் உறுதி!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து 5,291 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,78,271 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 46,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,429 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 15,85,343 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதுவரை 2,17,11,36,934 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்