அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வர் உறுதி!
அரசு ஊழியர்கள் பல காலமாக தொடர்ந்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை வைத்து வரும் நிலையில், மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் பட்சத்தில் உடனடியாக அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
பழைய பென்சன் திட்டம்:
நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் திட்டம் தான் தற்போதைய நிலையில் அவர்களுக்கான முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. தற்போது அமலில் இருந்து வரும் புதிய பென்சன் திட்டத்தில் ஊழியர்களுக்கு சிறப்பான பலன்கள் ஏதும் கிடைப்பதில்லை என்றும், இதனால் அரசு பழைய பென்சன் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர். முன்னர் கோரிக்கைகள் வைக்கப்படும், எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில், இதற்காக அரசு ஊழியர்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி கணக்கு வைத்திருப்போரின் கவனத்திற்கு – இது தெரியலைனா சிரமம் உங்களுக்கு தான்!
முன்னதாக பழைய பென்ஷன் திட்டம் ஜார்கண்ட் மாநிலத்திலும், அதன்பிறகு சத்தீஸ்கர் மாநிலத்திலும் கூட அமலுக்கு வந்து விட்டது. இதனால் மற்ற மாநிலங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களுக்கும் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், தற்போதைய ஆண்டின் இறுதியில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் வர உள்ளது. நாட்டின் அனைத்து முன்னணி கட்சிகளும் அங்கு போட்டியிடுகின்றன.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநில தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்