தீபாவளி பரிசுத்தொகுப்பு குறித்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் – குஷியில் மக்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
பரிசுத் தொகுப்பு:
இந்தியாவில் அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் ரேஷன் அட்டைதாரர்கள் மாதந்தோறும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நலத்திட்ட உதவிகளை ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாபட்டு வருகிறது. மக்கள் புத்தாடைகள் அணிந்தும் பல வகையான உணவுகளை சமைத்தும், பட்டாசுகளை வெடித்தும் பண்டிகையாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். மேலும் ஏழை, எளிய மக்களும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் ரேஷன் கடைகள் வாயிலாக பரிசுத்தொகுப்பு வழங்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து அம்மாநில தலைநகர் மும்பையில் மாநில அமைச்சரவை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு – மீறினால் நடவடிக்கை பாயும்!
Exams Daily Mobile App Download
இதனையடுத்து ரூ. 100 அளவிலான ஒரு கிலோ ரவை, பருப்பு, நிலக்கடலை, சமையல் எண்ணெய் மற்றும் மஞ்சள் ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி 30 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு நாளில் அரசின் இந்த சலுகையை மக்கள் பெற்று பயனடையலாம். இத்திட்டத்திற்காக அம்மாநில அரசு ரூ.513 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்