மதுரை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அதிரடியாக வரவிருக்கும் சூப்பர் திட்டம் – தயார் நிலையில் அறிக்கை!
தமிழகத்தில் சென்னையில் பறக்கும் ரயில் திட்டம் அமலில் இருப்பதை தொடர்ந்து மதுரையிலும் பறக்கும் ரயில் திட்டத்திற்கான அறிக்கை தயாராக இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
பறக்கும் ரயில் திட்டம்:
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பறக்கும் ரயில் திட்டம் அமலில் இருப்பது போல மற்ற முக்கிய மாநிலங்களில் பறக்கும் ரயில் திட்டம் சேவையை கொண்டு வர அரசு தீவிர முயற்சியை செய்து வருகிறது. பறக்கும் ரயில் திட்டம் என்பது பாலத்திற்கு மேல் ரயில் சேவை வழங்குவது ஆகும். குறிப்பாக மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் பறக்கும் ரயில் சேவையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை பறக்கும் ரயில் தொடக்கத்திற்கான விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் அது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் திட்டத்தை உள்ளடக்கும் பகுதிகள், திட்டத்தின் செலவு மற்றும் நகரத்திற்கு ஏற்ற போக்குவரத்துக்கு அமைப்பின் வகை ஆகியவை குறிப்பிடப்பட்டது.
இனி ஜாக்பாட் தான்.. அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
Exams Daily Mobile App Download
மதுரை பறக்கும் ரயில் திட்டத்திற்காக ஆராயப்பட்ட சீரமைப்புகளில் ஒன்றாக ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் இடையே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பிற வழித்தடங்கள் குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. பரிசீலனை முடிந்த நிலையில் மதுரையில் பறக்கும் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிக்கை தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் கொடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனால் மதுரையில் பறக்கும் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்