மத்திய அரசின் PM KISAN திட்ட விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.6000 உதவித்தொகை!
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதி உதவி பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. இந்த நிலையில் சில முக்கிய விதிமுறைகளை நீக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிசான் திட்டம்:
இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் 3 கட்டங்களாக ரூ. 6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் இந்த நிதி வரவு வைக்கப்படுகிறது. மேலும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்காக மத்திய அரசு 2019-2020 நிதியாண்டில் ரூ.75,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தில் எக்ஸ்இ வகை கொரோனா வைரஸ் தொற்று பரவல்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. விவசாயிகள் அரசுக்கு வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது விவசாயம் செய்பவர் நிலம் அவரது பெயரில் மட்டுமே இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 16 கோடி விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். நிபந்தனைகளை தாண்டி ஆன்லைனில் சில நடைமுறைகளையும் முடிப்பது அவசியம் அப்போது கிசான் நிதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ExamsDaily Mobile App Download
குறிப்பாக கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயம். விவசாயிகளின் ஆதார் நம்பர், மொபைல் நம்பர் சரிபார்ப்பு போன்ற வேலைகளை முடிப்பது அவசியமாகும். இதில் சில முக்கியமான விதிமுறை தற்காலிகமாக நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கேஒய்சி போன்ற விதிமுறைகளை முடிக்காவிட்டால் பணம் வந்து சேராது. தற்போது இவை நீக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 11 கிசான் தவணை திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பித்து வருகின்றனர். இதனையடுத்து https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தில் விவசாயிகள் நிதியுதவியின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.