தமிழகத்தில் எக்ஸ்இ வகை கொரோனா வைரஸ் தொற்று பரவல்? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் தற்போது அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதுடன் எக்ஸ்இ வைரஸ் தொற்று வேகமாக இந்தியாவில் தடம் பதித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதை பற்றி விரிவாக பார்ப்போம்.
எக்ஸ்இ வைரஸ்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இந்தியாவில் கொரோனா பரவலின் 4ம் அலை பரவல் தொடங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அண்டை நாடுகளிலும் மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் ஓமைக்ரானின் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவான “எக்ஸ்இ” வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது ஓமைக்ரான் வைரஸை விட 10 மடங்கு வேகமாக பரவக் கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஒருவருக்கு எக்ஸ்இ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைநகர் டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 4 வரை பொது விடுமுறை – சூப்பர் உத்தரவு!
மேலும் எக்ஸ்இ வைரஸ் தொற்று குறித்து சுகாதாரத்துறை செயலர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளது. அத்துடன் தமிழகத்தில் இதுவரை எக்ஸ்இ வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஏனெனில் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்படும் போது பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்ததற்கு முக்கிய காரணமாக இருப்பது தடுப்பூசி செலுத்தியதாகும். பொதுமக்கள் எக்ஸ்இ வைரஸ் தொற்று குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்றும் தற்போது தமிழகத்தில் பதற்றமடைமான சூழல் இல்லை என்றும் கூறியுள்ளார்.