மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. ஜூன் மாதம் வெளியாகும் ஜாக்பாட் – உயரும் சம்பளம்!
மத்திய அரசு இந்த ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ள நிலையில் ஜூலை மாதம் ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது
அரசு ஊழியர்கள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி வழங்கப்படும். அந்த வகையில் ஜூன் மாத அகவிலைப்படி உயர்வை ஊழியர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் பணியை சரியாக செய்தால் ஜூன் மாதம் ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்க வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர்.
IT துறையில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!
அந்த வகையில் மத்திய ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு தற்போது 2.57 சதவீதம் ஃபிட்மென்ட் காரணி வழங்கி வருகிறது. ஃபிட்மென்ட் காரணியை 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்தினால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் அதனால் அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், ஜூன் மாதம் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download