தமிழகத்தில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நிரந்தரப்பணி – அறிவிப்பு வெளியிடு!
தமிழகத்தில் 2022- 23 ஆம் நிதியாண்டில் மட்டுமே 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிரந்தரபணியில் சேர்ந்துள்ளதாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
நிரந்தரப்பணி:
தமிழகத்தில் கடந்த 2022- 23 ஆம் நிதியாண்டில் மட்டுமே நிரந்தர பணியில் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை குறித்தான ஆய்வில் 14 லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் நிரந்தர பணியில் சேர்ந்துள்ளதாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டுமே தமிழகத்தில் 12 லட்சத்து 84 ஆயிரத்து 986 வேலை வாய்ப்புகள் உருவாக்கம் செய்யப்பட்ட நிலையில் 2022-23 ஆம் நிதியாண்டில் 9.4 சதவீதம் அதிகரித்து 14 லட்சத்து 5 ஆயிரத்து 171 வேலை வாய்ப்புகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. ஜூன் மாதம் வெளியாகும் ஜாக்பாட் – உயரும் சம்பளம்!
இதில், 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிரந்தர பணியில் இருப்பதாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்திருக்கிறது. அதில், இந்த நிதி ஆண்டில் மட்டுமே 18 வயதிற்கு கீழ் உள்ள 15,763 இளைஞர்களும், 22 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 3,68,981 இளைஞர்களும் இந்த ஆண்டு நிரந்தரப் பணிகள் சேர்ந்துள்ளனர்.
மேலும், 26 முதல் 28 வயதுள்ள இளைஞர்கள் ஒரு லட்சத்து 61 இளைஞர்களும் இந்த ஆண்டு நிரந்தர பணியில் சேர்ந்துள்ளதாக வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கருத்துக்கணிப்பின்படி இளைஞர்கள் படித்து முடித்த சில மாதங்களிலேயே நிரந்தர பணியில் சேர்ந்து விடுவதாகவும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.