அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!
இந்தியாவில் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க தற்போது கால அவகாசம் 2022 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ரேஷன் – ஆதார்:
இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த ஊரடங்கு மாதங்களில் அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணங்களை பெற்று மக்கள் பயனடைந்தனர். இந்த குடும்ப அட்டை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்து ரேஷன் அட்டைகளின் தரநிலை 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது.
1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை ஒத்திவைப்பு!
இத்திட்டத்தின் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இதற்கு ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். அதனால் அரசு ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க மார்ச் 31 வரை அவகாசம் வழங்கியது. தற்போது இந்த காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரேஷன் கார்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ் ஆகிய ஆவணங்கள் அவசியமாகும்.
இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆன்லைன் மூலமாகவும் எளிதாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் start now’ என்பதைக் கிளிக் செய்து அதில் வரும் படிவத்தில் முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய விவரங்களை உள்ளிட்டு அடுத்ததாக ration card benefit’ என்ற ஆப்ஷனுக்கு சென்று மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும் பின்னர் OTP SEND செய்ய வேண்டும். அதன் பிறகு இறுதியாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைந்து விடும்.