1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை ஒத்திவைப்பு!

0
1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கோடை விடுமுறை ஒத்திவைப்பு!
1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கோடை விடுமுறை ஒத்திவைப்பு!
1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை ஒத்திவைப்பு!

கடந்த 2 வருடங்களுக்கு பிறகு அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில வாரியத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முடிந்து, அதன் பிறகு விடுமுறைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

விடுமுறை ஒத்திவைப்பு:

உலகையே அதிக பேரழிவுக்கு தள்ளிய கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் பாதுகாப்பிற்காக ஆன்லைன் முறையில் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால் மாணவர்களின் நேரடி கல்விமுறை அதிகம் பாதிக்கப்பட்டது. எனவே மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி இழப்பை ஈடுசெய்ய 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ‘முழு நாள்’ செயல்படும் என்று மகாராஷ்டிரா கல்வித்துறை தெரிவித்துள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் முடிந்து, அதன் பிறகு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கும்.

ஏப்ரல் 4 முதல் அரை நாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!

மகாராஷ்டிரா அரசின் இணைச் செயலர் ஐ.எம்.காசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பள்ளிகள் அரை நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வத்துடன் செயல்படுவதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் முழு நாள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் நடத்தப்பட்டு மே மாதத்திற்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. புனே மாவட்ட முதல்வர்கள் சங்கத்தின் தலைவர் ஹரிஷ்சந்திர கெய்க்வாட் கூறுகையில், பிப்ரவரி இறுதிக்குள் அரசாங்கம் இந்த ஜிஆர் வெளியிட்டிருக்க வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கம்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

பள்ளிகள் ஏற்கனவே தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்தங்களை முடித்துவிட்டு கால அட்டவணையை வெளியிட்டு விட்டதாக கூறினார். இந்த ஜி.ஆர் கல்வித்துறை மே மாதத்திற்குள் முடிவுகளை அறிவிக்க பள்ளிகளை கேட்டுள்ளது, ஆனால் தேதி வழங்கப்படவில்லை. காலக்கெடு இருந்திருந்தால், பள்ளிகளுக்கு திட்டமிடுவது எளிதாக இருந்திருக்கும் என கெய்க்வாட் கூறினார். சாதாரண பாடத்திட்டத்தில், மகாராஷ்டிர மாநில வாரியத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முடிந்து, அதன்பின் விடுமுறைகள் தொடங்கும். இப்போது இந்த புதிய ஜிஆர் மூலம், மாணவர்கள் ஏப்ரல் இறுதி வரை பள்ளிகளுக்கு வர வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!