தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு பரிசீலனை!
தமிழகத்தில் அண்மையில் வெயிலின் தாக்கம் அதிகமாகி விட்டதால் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனி கிழமைகளில் பள்ளிகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வாய்த்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பரிசீலனை செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள்:
தமிழ்நாட்டில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு கண்டிப்பான முறையில் பொதுத் தேர்வுகள் நடக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பொது தேர்வுகளுக்கான தேதிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவித்தது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
தமிழக அரசின் மின் துறையில் 10வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ஆண்களுக்கு முன்னுரிமை..!
அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு – இனி முன்பதிவு இல்லாமலேயே பயணம் செய்யலாம்!
இந்த நிலையில் அடுத்ததாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது மிகவும் கொடூரமான முறையில் வெயில் தாக்கி வருவதால் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனிமேல் வர உள்ள சனிக்கிழமைகளில் விடுமுறை விட வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டு வந்தது. தற்போது தமிழக அரசும் அவர்கள் வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.