‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி – தாய்மையடையும் முல்லை!
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சமீப காலமாக ஒரே கவலையான காட்சிகளும், சண்டைகளுமே ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மகிழ்ச்சியான எபிசோடுகள் வர உள்ளது.
தாய்மையடையும் முல்லை:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட்டு குடும்பத்தின் அனைத்து வகையான நன்மைகளையும், குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு சலசலப்புகளையும் அப்படியே படம் பிடித்து காட்டுகின்றனர். தற்போதைய காலத்தில் கூட்டு குடும்பம் என்பது சாத்தியமற்று போயுள்ள நிலையில், இந்த சீரியலை மக்கள் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர். அதிக பட்சமாக எந்த வித நெகட்டிவிட்டியும் இல்லாமல் குடும்பத்தை மட்டுமே சுற்றி நடக்கும் கதையாக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
Exams Daily Mobile App Download
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் அல்லது ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் ஏற்படும் சிக்கல்களை அவர்கள் ஒன்றாக சேர்ந்து எவ்வாறு சரி செய்கிறார்கள் என்று கதைக்களம் உள்ளது. அந்த வகையில், முல்லைக்கு இயற்கை முறையில் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்பதை அறிந்த குடும்பத்தினர், ஒரு பக்கம் அதிர்ச்சி அடைந்தாலும், இன்னொரு புறம் அதில் இருந்து முல்லையை எவ்வாறு வெளியே கொண்டு வருவது என்று பல முயற்சிகளையும் செய்கிறார்கள்.
விஜே சித்ராவின் கணவர் ஹேமந்த் குறித்து நடிகை சொன்ன பகீர் தகவல் – ரசிகர்கள் ஷாக்!
செயற்கை முறை கருவுறுதலுக்கு ரூ.5 லட்சம் பணம் செலவு செய்து முயற்சி செய்கிறார்கள். ஆனால், அதுவும் தோல்வியில் முடிந்து விடுவதால், முல்லை மிகவும் வருத்தப்படுகிறார். முல்லையின் சிந்தனையை மாற்ற குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளையும் செய்து வரும் நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், முல்லை திடீர் என்று இயற்கையாகவே கர்ப்பமடைகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.