தங்கம் வாங்குவோர் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம்! வெளியான அப்டேட்!
நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் ஹால்மார்க் நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில் மார்ச் 31க்குப் பின் ஹால்மார்க் அடையாளம் இல்லாத நகையை விற்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால்மார்க் நகைகள்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கம் விலை ஒரு பக்கம் இருந்தாலும், மத்திய அரசு ஹால்மார்க் முத்திரை உடன் தான் நகையை விற்க வேண்டும் எனஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தங்க ஹால்மார்க் புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி மார்ச் 31 ஆம் தேதிக்கு பின் ஹால்மார்க் குறியீடான ஆறு இலக்க HUID இல்லாமல் தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
கனரா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி நாள்!
மேலும் வாடிக்கையாளர்கள் நலன் கருதி ஏப்ரல் 1 முதல் hallmark முத்திரை பதித்த தங்கம் மட்டுமே விற்பனை என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தங்க ஹால்மார்க் என்பது விலைமதிப்பற்ற உலோகத்தின் தூய்மை தரத்தின் சான்றிதழாகும். தற்போது ஹால்மார்க் கட்டாயம் என்ற அறிவிப்பு 288 மாவட்டங்களில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.