தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேர்வுகள் ரத்து:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் பெற்றோர்களின் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதன் படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த முறை வெளியிட்ட ஊரடங்கு தளர்வுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நவம்பர் மாதம் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு உத்தரவிட்டது.

அக்.22 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி – ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. மேலும் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் களைகட்டும் தீபாவளி பண்டிகை – அரசு பேருந்திற்கு 7 ஆயிரம் பேர் முன்பதிவு!

தொடர்ந்து பேசிய அவர், இந்த வருடம் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்துவதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் மாணவர்கள் தொடர்ந்து மாஸ்க் அணிய முடியாது என்பதால் அவர்களை ஒரு மணி நேரத்தில் பெற்றோர்கள் அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!