அக்.22 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி – ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 22 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவி வந்தது. இதனால் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பரவும் விகிதம் அதிகரித்தது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டு சில மாதங்களில் இரண்டாம் அலை பரவத் தொடங்கியது.
தமிழகத்தில் களைகட்டும் தீபாவளி பண்டிகை – அரசு பேருந்திற்கு 7 ஆயிரம் பேர் முன்பதிவு!
கடந்த மார்ச் மாதம் முதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிய கொரோனா 2ம் அலையின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், கோயில்கள், திருவிழாக்கள், திரையரங்குகள், பூங்காக்கள் முதலியவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுற்றுலா தளங்கள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில் கொரோனா 2ம் அலையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
SBI வங்கியில் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் – எப்படி பெறுவது? எளிய வழிமுறைகள்!
இந்நிலையில் கடந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டு மீண்டும் மூடப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் 2ம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா பகுதியில் கொரோனா பரவல் அதிகமாகி வந்தது. தற்போது நோய்த்தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அக்.22ம் தேதி முதல் திரையரங்குகள் மற்றும் பொது அரங்குகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரே நேரத்தில் 50 சதவிகிதத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.