GST வரி செலுத்துவதில் புதிய விதியை அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு – முக்கிய விவரங்கள் இதோ!
மத்திய அரசின் வரி விதிப்புகளில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது போல், தற்போது GST ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் புதிய மாற்றங்கள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
GST ரிட்டர்ன்:
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்பது நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதற்காக அரசு விதிக்கும் வரி ஆகும். மாநில அரசுகள் வசூலித்து வந்த இந்த வரிகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, கடந்த 2017ம் ஆண்டு முதல் மத்திய அரசு இதற்கான அனைத்து விதிகளையும் மாற்றி அமைத்தது. இதனால், மதிப்பு கூட்டப்பட்ட வரிகள் மற்றும் மறைமுக வரிகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டது.
தமிழக உணவகங்களில் CCTV கேமரா – உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்! முக்கிய தீர்ப்பு வெளியீடு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகமானது, GST ரிட்டர்ன் தாக்கல் செய்வது குறித்த புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, வரி செலுத்துவோர் தற்போதைய காலத்திற்கான ஜிஎஸ்ஆர் -1 ஐ தாக்கல் செய்வதற்கு முன் முந்தைய வரி காலத்திற்கான ஜிஎஸ்ஆர் – 1 ஐ தாக்கல் செய்ய வேண்டும் என்றும், முந்தைய காலகட்டத்தின் GSTR-3B தாக்கல் செய்யப்படாவிட்டால், வரி செலுத்துவோர் GSTR-1 ஐ தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.