தமிழக உணவகங்களில் CCTV கேமரா – உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்! முக்கிய தீர்ப்பு வெளியீடு!
தமிழகத்தில் உள்ள உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுவதை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
சிசிடிவி கேமரா:
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அனைத்து உணவகங்களிலும் ஆய்வு மேற்கொண்டது. அப்போது சில உணவகங்களில் உணவின் தரம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் அனைத்து உணவகங்களிலும் சுத்தமான முறையில் உணவு சமைக்கப்படுகின்றதா என்பதை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கூறி வழக்கறிஞர் நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
பிரபல ஐடி நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு.. ஒரே வருடத்தில் 1000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டம்!
Exams Daily Mobile App Download
அப்போது நீதிபதிகள் மனுவை ஆய்வு செய்து, மாநிலம் முழுவதும் நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை எண்ணற்ற உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் அனைத்திலும் சிசிடிவி கேமரா பொருத்துவது சாத்தியமில்லை என்று கூறி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.