ஜூன் 12ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – அறிவிப்பு வெளியீடு!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களது தலைமையில் வருகிற ஜூன் 12ம் தேதி அன்று காணொளி மூலம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் கடைசியாக கடந்த மே மாதம் 28ம் தேதி அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அனைத்து மாநில/யூனியன் பிரதேச நிதி அமைச்சர்கள் கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான பிபிஇ கிட், முகக்கவசம் மற்றும் தடுப்பூசிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்று மற்றும் கருப்பு பூஞ்சை ஆகிய இரு நோய்களும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் டிசம்பர் 2021 வரை நீட்டிப்பு – வணிக உரிமங்கள் & சட்டபூர்வ ஆவணங்கள்!
இந்த நோய்களுக்கான சிகிச்சைக்கு தேவையான பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு மாநில/ யூனியன் பிரதேச அமைச்சர்கள் கோரி வருகின்றனர். இதை அடுத்து வருகிற ஜூன் மாதம் 12ம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களது தலைமையில் காணொளி மூலம் மீண்டும் ஜிஎஸ்டி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில/யூனியன் பிரதேச அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தமிழகம் சார்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். கொரோனா நோய் பரவல் மற்றும் கருப்பு பூஞ்சை நோய் அதிகரிப்புக்கு மத்தியில் தற்போது ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற உள்ளதால் இந்த கூட்டத்தில் சிகிச்சைக்கு தேவைப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.