தமிழகத்தில் டிசம்பர் 2021 வரை நீட்டிப்பு – வணிக உரிமங்கள் & சட்டபூர்வ ஆவணங்கள்!
கொரோனா பரவல் காரணமாக வணிக உரிமங்கள் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களும் இந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வணிக உரிமங்கள் நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் மதுபான பார்கள் திறப்பு? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அதன் படி அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் இயங்குவதற்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், அவை செயல்படுவதற்கான உரிமங்கள் காலாவதியாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனால் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காலாவதி ஆகும் வணிக நிறுவனங்களின் உரிமங்கள் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை உள்ளிட்ட தொழிலாளர் துறைக்கான வணிக உரிமங்கள் மற்றும் அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களும் டிசம்பர் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.