இந்தியாவில் GST வசூல் ஒரு ஆண்டில் 12 சதவிகிதம் அதிகரிப்பு – நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை!
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, 2023 பிப்ரவரி மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ஒரு ஆண்டுக்கு சுமார் 12% அதிகரித்து ரூ.1,49,577 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வசூல்
இந்தியாவின் 2023-24 பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் நிகர ஜிஎஸ்டி வசூலில் 12% வளர்ச்சி இருக்கும் என கணித்து சொல்லி இருந்தார். ஏற்கனவே 2022-23 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டியை 8.54 லட்சம் கோடி வசூலிக்க அரசு இலக்கு வைத்தது. இந்நிலையில் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி 2023 பிப்ரவரி மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ஒரு ஆண்டுக்கு சுமார் 12% அதிகரித்து ரூ.1,49,577 கோடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச பட்ஜெட் 2023: மாணவிகளுக்கு இலவச இ-பைக் – அட்டகாசமான அறிவிப்புகள் வெளியீடு!
அதில் சிஜிஎஸ்டி ரூ.27,662 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.34,915 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.75,069 கோடி, செஸ் ரூ.11,931 கோடியாகும். இதற்கு காரணம் சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 6% அதிகமாக இருந்ததும், உள்நாட்டு பரிவர்த்தனையின் வருவாய் 15% அதிகமாக இருப்பது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் விவேக் ஜோஹ்ரி கூறுகையில், சமீபத்தில் ஜிஎஸ்டி வசூலில் ரூ. 1.5 லட்சம் கோடி என்பது புதிய இயல்பானதாகிவிட்டதாகவும், வருகிற ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.