மத்திய பிரதேச பட்ஜெட் 2023: மாணவிகளுக்கு இலவச இ-பைக் – அட்டகாசமான அறிவிப்புகள் வெளியீடு!
நாட்டின் மத்திய பட்ஜெட் வெளியானதை தொடர்ந்து, தற்போது மாநில அரசுகளும் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய பிரதேச அரசு தாக்கல் செய்துள்ளது.
பட்ஜெட்
மத்திய பிரதேச மாநில அரசு 2023-24 ம் ஆண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட் ஆனது ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதில், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.459 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் கவனத்திற்கு .. இனி ரயில் நிலையத்தில் சத்தமே இருக்காது – ஒரே சைலண்ட் தான் !
இதையடுத்து பெண்களுக்கான முதலமைச்சரின் இ-பைக் வழங்கும் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு இ-பைக் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ‘லட்லி பெஹ்னா யோஜனா’ திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாமல் இருக்கும் பெண்களின் வங்கிக் கணக்கிற்கு மாதந்தோறும் ரூ.1000 செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பழங்குடியின பைகா, பரியா, சஹாரியா ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.