பயணிகள் கவனத்திற்கு .. இனி ரயில் நிலையத்தில் சத்தமே இருக்காது – ஒரே சைலண்ட் தான் !

0
பயணிகள் கவனத்திற்கு .. இனி ரயில் நிலையத்தில் சத்தமே இருக்காது - ஒரே சைலண்ட் தான் !
பயணிகள் கவனத்திற்கு .. இனி ரயில் நிலையத்தில் சத்தமே இருக்காது - ஒரே சைலண்ட் தான் !
பயணிகள் கவனத்திற்கு .. இனி ரயில் நிலையத்தில் சத்தமே இருக்காது – ஒரே சைலண்ட் தான் !

இந்தியாவில் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு ரயில்கள் குறித்த விவரங்கள் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையை மாற்ற ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழக ரயில் நிலையத்தில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையம்:

இந்தியாவில் ரயில்வே துறை பயணிகளுக்கு சிறந்த சேவை அளிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும், நீண்ட தூர பயணங்களுக்கான நேரத்தை குறைக்கும் வகையிலும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

SSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதனைத் தொடர்ந்து தற்போது டிக்கெட் முன்பதிவு போன்ற நடைமுறைகள் பயணிகள் அணுகும் வகையில் மிகவும் எளிதாகி விட்டது. அடுத்தாக நாடு முழுவதும் உள்ள சுமார் 100 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலையங்களை போல ரயில் நிலையங்களிலும் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு அதில் ரயில்கள் குறித்த விவரங்களை திரையிட திட்டமிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

வழக்கமாக ரயில் நிலையங்கள் என்றாலே ஒலி பெருக்கி வாயிலாக ரயில்கள் புறப்படும் நேரம், சென்றடையும் நேரம், பிளாட்பார்ம் எண் போன்றவை அறிவிக்கபட்டு வரும். இந்த முறை மாற்றப்பட்டு, இனி ரயில் நிலையங்களில் பயணிகள் அறியும் படி விவரங்களை டிஜிட்டல் திரையில் வரும். இந்த திட்டம் முதன் முதலாக சென்னை டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொண்டு வரப்படவுள்ளது. பயணிகளின் வசதிக்காக தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு விவரங்கள் திரையிடப்படவுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!