TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வு அறிவிப்பு & குரூப் 1 தேர்வு முடிவுகள் எப்போது? அரசுக்கு கேள்வி!

0
TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வு அறிவிப்பு & குரூப் 1 தேர்வு முடிவுகள் எப்போது? அரசுக்கு கேள்வி!
TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வு அறிவிப்பு & குரூப் 1 தேர்வு முடிவுகள் எப்போது? அரசுக்கு கேள்வி!
TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வு அறிவிப்பு & குரூப் 1 தேர்வு முடிவுகள் எப்போது? அரசுக்கு கேள்வி!

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான ஊழியர்களை நியமிக்கும் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வுகளை விரைவில் நடத்த வேண்டும். முன்னதாக நடத்தப்பட்டிருந்த குரூப் 1 தேர்வின் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

TNPSC தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் அச்சறுத்தல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. அதற்கு முந்தைய காலகட்டத்தில் அனைத்து படிநிலைகளையும் முடித்து விட்டவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC குரூப் 1 தேர்வின் முடிவுகளும் தற்போது வரை வெளியிடப்படாமல் உள்ளது. புதிய அரசு கடந்த 2021 மே மாதம் ஆட்சிக்கு வந்த உடன் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும்.

நாடு முழுவதும் 2014 முதல் 2021 வரை 6.98 லட்சம் பேருக்கு பணி நியமனம் – மத்திய அரசு தகவல்!

மேலும் இதற்கான தேர்வுகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் தேர்வு காத்திருக்கும் நபர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது குறித்து தமிழக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு, பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு பணியில் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கை அமலுக்கு வந்துள்ளது.

அரசு பணிக்கு தகுதியான பட்டப்படிப்பை மட்டுமே தமிழ் வழியில் படித்து அதன் மூலம் அரசின் இடஒதுக்கீடு முறையை பலரும் தவறாக பயன்படுத்தி வந்தனர். கடந்த 2010ம் ஆண்டு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு வழங்குவது குறித்த சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை முறைகேடாக பயன்படுத்துவது குறித்து பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் முறையிட்டு வந்தது. இதற்கான திருத்தப்பட்ட சட்ட மசோதா கடந்த 2020 மார்ச் 16 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, சுமார் 9 மாத காலத்திற்கு பிறகு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் இதற்கு முன்னதாக 2020-ஆம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி தமிழக அரசுக்கு 18 துணை ஆட்சியர், 19 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 69 குரூப் 1 நிலை அதிகாரிகள் தேர்வுக்கான அறிவிப்பு வந்தது.

டிச.4ம் தேதி மதியம் வரை பள்ளிகளை மூட உத்தரவு – ‘ஜவாத்’ புயல் எதிரொலி!

ஆனால் புதிய இட ஒதுக்கீட்டு விதிகளின் படியான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் 4 நாட்களில் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாமல் உள்ளதால் தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இதனால் தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வின் முடிவுகளை தாமதிக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், குரூப் 2, குரூப் 4 பணிகளுக்கான தேர்வுகளை பற்றிய அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!