டிச.4ம் தேதி மதியம் வரை பள்ளிகளை மூட உத்தரவு – ‘ஜவாத்’ புயல் எதிரொலி!

0
டிச.4ம் தேதி மதியம் வரை பள்ளிகளை மூட உத்தரவு - 'ஜவாத்' புயல் எதிரொலி!
டிச.4ம் தேதி மதியம் வரை பள்ளிகளை மூட உத்தரவு - 'ஜவாத்' புயல் எதிரொலி!
டிச.4ம் தேதி மதியம் வரை பள்ளிகளை மூட உத்தரவு – ‘ஜவாத்’ புயல் எதிரொலி!

ஆந்திராவில் ஜவாத் புயல் தாக்கியுள்ளதால் விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை இன்று மற்றும் நாளை (டிசம்பர் 4ம் தேதி) மதியம் வரை மூட விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஜவாத் புயல் பாதிப்பு:

கடந்த நவம்பர் மாதம் வங்க கடலில் அடுத்தடுத்து உருவாகி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த கனமழை பெய்து வந்தது. இதனால் பாதிப்புகள் அதிக அளவில் இருந்ததால் பல மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜவாத் புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்கு பாதிப்புகள் கடுமையாக உள்ளது. எனவே முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, அவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் – வானிலை அறிக்கை!

அதில் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களிடம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். சூறாவளி புயலால் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தாழ்வான பகுதிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் எச்சரிக்கையாக இருங்கள் என்று முதல்வர் ஆட்சியர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தேவையான இடங்களில் நிவாரண முகாம்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு – 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு!

ஜவாத் புயல் தாக்கத்தின் காரணமாக ஆந்திராவில் விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மூட விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் டிசம்பர் 3ம் தேதியின் இன்று மற்றும் நாளை டிசம்பர் 4 மதியம் வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜவாத் புயல் காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சுமார் 65 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!