ரூ.35 லட்சம் மற்றும் போனஸ் வழங்கும் கிராம சுராக்ஷா யோஜனா திட்டம் – விவரங்கள் கீழே!
தபால் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து தபால் துறை கிராம சுராக்ஷா யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கிராம சுராக்ஷா யோஜனா திட்டம்:
தபால் நிலையங்கள் மூலம் நாட்டு மக்கள் அதிக பலன்களை அடையும் வகையில் மத்திய அரசு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. வங்கி கணக்கு போன்று அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்குகள் தொடங்கவும், கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்வதற்கு ATM போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தபால் துறை கிராம சுராக்ஷா யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இன்றும், நாளையும் ஆன்லைன் சேவைகள் நிறுத்தம்!
இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நபரின் 80 வயதிலோ அல்லது மரணமடையும் போது போனஸூடன் பணம் ரிட்டன் செய்யப்படும் என கூறப்படுகிறது. 19 வயது முதல் 55 வயது வரை உடையவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயனடையலாம். இந்த திட்டத்தில் பயனர்கள் ரூ.10,000 முதல் 10 லட்சம் வரை மாதாந்திர அல்லது வருடாந்திர முறைகளில் முதலீடு செய்யலாம். மேலும் இந்த திட்டத்தில் இணைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்தவர்களுக்கு அஞ்சல் துறையில் கடன் வாங்கும் வசதியும் உண்டு.
ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!
இந்த திட்டத்தில் ரூ.1000க்கு ரூ.65 வரை போனஸ் வழங்கப்படுகிறது. திட்டம் தொடங்கி மூன்று வருடங்களில் முடித்துக் கொள்பவர்களுக்கு எவ்வித பலன்களும் வழங்கப்படாது. 19 வயதில் ரூ. 10 லட்சம் செலுத்தி இந்த திட்டத்தில் இணைபவருக்கு மாதாந்திர ப்ரீமியம் 55 ஆண்டுகளுக்கு ரூ. 1,515 ஆகவும் 58 ஆண்டுகளுக்கு ரூ.1,463 ஆகவும் இருக்கும். மேலும் 60 ஆண்டுகளுக்கு ரூ. 1,411 ஆகவும் இருக்கும் என கூறப்படுகிறது. பயனர் 55 வருடங்கள் திட்டமிட்டிருந்தால் 31.60 லட்சம் ரூபாய், 58 ஆண்டுகளுக்கு திட்டமிட்டிருந்தால் ரூ. 33.40 லட்சம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.