SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இன்றும், நாளையும் ஆன்லைன் சேவைகள் நிறுத்தம்!
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான SBI தனது நிறுவனத்தில் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் இன்றும், நாளையும் (அக்.9, 10) ஆன்லைன் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஆன்லைன் சேவைகள்
வாடிக்கையாளர்களின் சேவைகளை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி நிறுவனம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது SBI வங்கியில் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக தனது இணைய சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 9 முதல் அக்டோபர் 11ம் தேதி வரை SBI வாடிக்கையாளர்கள் வங்கியின் இணைய சேவைள் நிறுத்தப்படும்.
ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!
இதன் மூலம் குறிப்பிட்ட நாட்களில் சில மணிநேரங்களுக்கு, SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக SBI வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,’SBI வாடிக்கையாளர்கள் இன்றும், நாளையும் (அக்டோபர் 9, 10) கிட்டத்தட்ட 120 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த முடியாது. நாங்கள் ஒரு சிறந்த வங்கி அனுபவத்தை வழங்க முயற்சிப்பதால் எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் எங்களுடன் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
அந்த வகையில் அக்டோபர் 9ம் தேதி இரவு 12.20 மணி முதல் அதிகாலை 02.20 வரையும், அக்டோபர் 10ம் தேதி அன்று 11:.20 மணி முதல் அக்டோபர் 11ம் தேதி அதிகாலை 1.20 மணி வரை பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த காலகட்டத்தில் இணைய வங்கி, யோனோ, யோனோ லைட், UPI சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது. இந்த தற்காலிக செயலிழப்புகள் மூலம் தனது பயனர்களுக்கு இணைய வங்கி சேவையை மிகவும் பாதுகாப்பானதாக வழங்க SBI வங்கி முடிவு செய்துள்ளது.