இந்திய அரசு பாதுகாப்புக் காரணங்களுக்காக சிசிடிவி கேமராக்களுக்கான என்க்ரிப்ஷனை கட்டாயமாக்கி இருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அரசு அறிவிப்பு
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், அதனால் சில பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் அரசு நிறுவனங்களில் உள்ள சிசிடிவி கேமராவை சைபர் தாக்குதல் மற்றும் சேதப்படுத்துதலில் இருந்து பாதுகாப்பது குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
NIMHANS நிறுவனத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
அதாவது விற்பனையாளர்கள் CCTV அமைப்புகளின் நெட்வொர்க் பாதுகாப்பை “தரவு பரிமாற்றத்தின் குறியாக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம்” உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சைபர் தாக்குதல்களை தெரிந்து கொள்ள ஊடுருவல் சோதனைகளை பயன்படுத்த வேண்டும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.