அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை : தமிழக அரசு அதிரடி அறிவிப்பு !!!!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு ஊடரங்கு போடப்பட்டுள்ளதால் பல்வேறு பொருளாதார இழப்புகளை அரசு எதிர் கொண்டு வருகிறது. இதனை சரிசெய்யும் பொருட்டு பல்வேறு மாநில அரசுகள் அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு அதுபோன்ற நடிவடிக்கை எடுக்கவில்லை. 20 சதவீத செலவினங்களை குறைக்கும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு 12,674 மையங்கள் !!!!
அரசு வெளியிட்டுள்ள அரசாணை:
- அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது
- மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைக்க தமிழக அரசு முடிவு
- அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும்
- நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி
- மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை
- சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி
- மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரெயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி.
- அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை:
இதில் ஒருதமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பகுதியாக அதே நேரத்தில் ஏற்கெனவே உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் எனவும் அரசுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |