10 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு 12,674 மையங்கள் !!!!
10 ஆம் வகுப்பு பொது தேர்வானது ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பொது தேர்வு அவசியமா என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை
இந்நிலையில் மத்திய அரசு தேர்வு குறித்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கி உள்ளது. அவையாவன கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்க கூடாது, மாணவர்களுக்கு பேருந்து வசதி எற்படுத்தி தர வேண்டும், மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் மற்றும்
உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று வெளியிட்ட செய்தியின் படி, 10 ஆம் வகுப்பு தேர்வு மையங்கள் 3,684 இல் இருந்து 12,674 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் மாணவர்கள் அச்சமின்றி அந்தந்த பகுதியிலே தேர்வு எழுதலாம் என்றும் கூறியள்ளார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |