அரசு வேலைவாய்ப்பில் 77% இட ஒதுக்கீடு.. மசோதா நிறைவேற்றம் – ஜார்கண்ட் அரசு அதிரடி!
ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது அரசு பணிகளுக்கான குறிப்பிட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
இட ஒதுக்கீடு:
மத்திய மற்றும் மாநில அரசுகள் தனது வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீத இடங்களை சமூக பிரிவின் படி ஒதுக்கீடு செய்கிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் உயர்வகுப்பு மக்களுக்கு இணையாக சமூக அந்தஸ்தையும் வாழ்க்கை மேம்பாட்டையும் அடையும் வகையில் இந்த இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது, ஜார்கண்ட் வேலைவாய்ப்பில் புதிய இடஒதுக்கீடு குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை SC,ST மற்றும் OBC பிரிவினருக்கு 60% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இனி ST பிரிவினருக்கு 28% என்றும், SC பிரிவினருக்கு 12% என்றும், OBC பிரிவினருக்கு 27% என்றும், EWS பிரிவினருக்கு 10% என்றும் மொத்தமாக 77% இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இது பிற அரசியல் கட்சிகள் உள்பட பலரின் வரவேற்பை பெற்று வருகிறது.