ஊழியர்கள் ‘இந்த’ வங்கியில் கணக்கு வைக்க கூடாதா? அரசு திடீர் உத்தரவு!
அரசு ஊழியர்கள் யாரும் HDFC வங்கியின் கணக்கை பயன்படுத்த கூடாது எனவும், கணக்கு வைத்திருப்பவர்கள் உடனடியாக கணக்கை முடிக்க வேண்டும் எனவும் பஞ்சாப் மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
HDFC வங்கி
அரசு ஊழியர்கள் ஒரு சில குறிப்பிட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்க கூடாது எனவும், தற்போது அந்த குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்தால் உடனடியாக அந்த கணக்கை முடித்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பஞ்சாப் அரசின் இந்த புதிய உத்தரவினால் அரசு ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளது. அதாவது, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் ஹெச்டிஎப்சி வங்கியில் கணக்கை தொடர கூடாது எனவும், தற்போது ஹெச்டிஎப்சி வங்கியில் வைத்துள்ள ஊழியர்கள் உடனடியாக கணக்கை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக விளங்கி வரும் ஹெச்டிஎப்சி வங்கியில் ஏன் கணக்கு தொடர கூடாது என ஊழியர்கள் அனைவரும் சிந்தித்தபடி இருந்தனர். இந்த புதிய உத்தரவினால் பஞ்சாப் மாநிலம் முழுக்கவே இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முக்கியமாக ஹெச்டிஎப்சி வங்கியில் அரசு ஊழியர்கள் கணக்கு தொடர கூடாது என்கிற அறிவிப்பை பஞ்சாப் மாநில அரசின் நீர்வளத்துறை தான் வெளியிட்டுள்ளது. நீர்வளத் துறையின் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் முதலான அதிகாரிகள் தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
IBPS தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக.27) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
மேலும், நீர்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து ஹெச்டிஎப்சி வங்கியில் கணக்கு தொடர கூடாது என நிதித்துறை முதன்மை செயலாளர் அனைத்து துறை செயலாளருக்கும் இந்த அறிக்கையை அனுப்பியுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று கேட்டபோது பஞ்சாப் நீர்வளத்துறைக்கும் ஹெச்டிஎப்சி வங்கிக்கும் நடுவே கடுமையான விவாதம் நடைபெற்றுள்ளது. அதாவது, பஞ்சாப் நீர்வளத்துறைக்கு ஹெச்டிஎப்சி வங்கி ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால் அரசு ஊழியர்கள் யாருமே அந்த வங்கியின் கணக்கை வைத்திருக்க கூடாது என இத்தகைய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்