தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் வராமல் இருக்க இதுதான் காரணமா? கவலையில் அரசு ஊழியர்கள்!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
பழைய பென்ஷன் திட்டம்
நாட்டில் அரசு ஊழியர்கள் தங்களுக்கு CPS எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டத்திற்கு பதிலாக பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி தற்போது பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் – புதிதாக 8 பேருக்கு தொற்று!!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்று ஆரம்ப காலத்திலிருந்து ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அத்துடன் திமுக அரசும் தனது தேர்தல் வாக்குறுதியில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஏனெனில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவோருக்கு ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகை அரசின் கருவூலத்தில் இருந்து வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர் இறந்துவிட்டாலும், ஓய்வூதியத்தொகையை குடும்ப உறுப்பினர்கள் பெற்று கொள்ளலாம். மேலும் இது போன்ற பல சலுகைகள் இருப்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் வருங்காலத்தில் அரசுக்கு நிதிச்சுமை அதிகரித்து சிக்கல் ஏற்படும். இதே போல், தமிழக நிதியமைச்சரும் நிதிச்சுமையைக் காரணமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது