தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் – புதிதாக 8 பேருக்கு தொற்று!!
தமிழகத்தில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. மேலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 57 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்றின் பல்வேறு அலைகளை கடந்த பிறகு, இந்தியாவில் மீண்டுமாக புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மக்கள் மீண்டுமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பேருந்து பயணிகள் கவனத்திற்கு – சென்னையின் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நோய்த்தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் சுமார் 10 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 57 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.