ஓலா, உபேர், ரேப்பிடோ நிறுவனங்களுக்கு அரசு வைத்த செக் – 3 நாட்களில் சேவை நிறுத்தம்!

0
ஓலா, உபேர், ரேப்பிடோ நிறுவனங்களுக்கு அரசு வைத்த செக் - 3 நாட்களில் சேவை நிறுத்தம்!
ஓலா, உபேர், ரேப்பிடோ நிறுவனங்களுக்கு அரசு வைத்த செக் - 3 நாட்களில் சேவை நிறுத்தம்!
ஓலா, உபேர், ரேப்பிடோ நிறுவனங்களுக்கு அரசு வைத்த செக் – 3 நாட்களில் சேவை நிறுத்தம்!

நாட்டில் முக்கிய தொழில் நகரமாக விளங்கும் பெங்களூரில் ஓலா, உபேர், ரேப்பிடோ நிறுவனங்களை சேர்ந்த ஆட்டோக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இவற்றை இனி இயக்குவது சட்ட விரோதம் என்றும் தெரிவித்துள்ளது.

சேவை நிறுத்தம்:

ஓலாவின் தலைமை நிறுவனமான உபெர் மற்றும் ரேப்பிடோ ஆகியவற்றுக்கு கர்நாடக போக்குவரத்துத் துறை நேற்று (07-10-2022), இந்த நிறுவனங்களில் ஆட்டோக்களை இனி இயக்க கூடாது என்றும், அவ்வாறு இயக்குவது இனி சட்ட விரோதமான செயல் என்றும், அவற்றின் சேவைகளை மூன்று நாட்களில் நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, இந்த நிறுவனங்களின் வாகன ஓட்டுனர்களுக்கு தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களின் ஆட்டோக்கள் இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தூரம் சென்றாலும், குறைந்தபட்சம் ரூ.100 வசூலிப்பது குறித்து பல பயணிகள் போக்குவரத்து துறையிடம் புகார்களை பதிவு செய்துள்ளனர். இதனால் தான் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.30 ஆகவும், அதன்பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Post Office-ன் லாபம் தரும் சேமிப்பு திட்டம் – ரூ. 34.60 லட்சம் வரை ரிட்டன்! இப்போதே சேருங்கள்!

Exams Daily Mobile App Download

அரசு வெளியிட்ட அறிக்கையில், ஓலா, உபேர், ரேப்பிடோ நிறுவனங்கள் தங்கள் ஆட்டோ சேவைகளை விரைவில் நிறுத்த வேண்டும் மற்றும் டாக்சி பயணிகளிடம் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கக்கூடாது. இந்த உத்தரவை பின்பற்றத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. ஆனால், ஓட்டுநர் தவிர்த்து ஆறு பயணிகளுக்கு மிகாமல் இருக்கை வசதி கொண்ட டாக்சிகள் மட்டும் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓலா, உபேர், ரேப்பிடோ நிறுவனங்களின் ஆட்டோ சேவைகளுக்கு மாற்றாக, கர்நாடகா அரசு நவம்பர் 1ம் தேதி முதல் “நம்ம யாத்ரி செயலி”யை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சேவையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைப் பின்பற்றி, பிக்-அப் கட்டணமாக கூடுதலாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படும் என்றும், 2 கிமீ சுற்றளவிற்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!