மாணவர்களை காப்பது அரசின் கடமை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை!

0
மாணவர்களை காப்பது அரசின் கடமை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை!
மாணவர்களை காப்பது அரசின் கடமை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை!
மாணவர்களை காப்பது அரசின் கடமை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை!

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்:

தமிழகத்தில் முதல்கட்டமாக உயர்வகுப்பு மாணவர்களான 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மற்ற தரப்புகளில் இருந்து ஆரம்ப நிலை மாணவர்கள் தொடர்ந்து பல மாதங்களாக பள்ளிக்கு வராததால் கற்றல் குறைபாடு அடைந்துள்ளதாகவும், இதனால் ஆரம்ப நிலை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதனால் தமிழக அரசு 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 24 பேர் – தமிழக அரசு அறிக்கை!

இந்நிலையில், பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியது. இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில், கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், வழிகாட்டுதல் நெறிமுறைகள் உறுதி செய்தல் போன்ற முக்கிய முடிவுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

IPL 2021 – RR vs RCB: பெங்களூர் அணிக்கு 150 ரன்கள் இலக்கு!

ஆலோசனையின் முடிவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் மழலையர் பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்றல் குறைபாடு தொடர்பாக சிறப்பு பயிற்சி வழங்கப்படும். மாணவர்களின் வருகையை பொறுத்து பருவ தேர்வுகள் நடத்துவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார். அதன்பின்னர், மாணவர்களை குறிக்கும் விதமாக, ” மாணவர்களே நம்பி பள்ளிக்கு வாருங்கள். உங்களை காக்க வேண்டியது அரசின் கடமை” என்று அறிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!