IPL 2021 – RR vs RCB: பெங்களூர் அணிக்கு 150 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43 வது போட்டி இன்று நடந்து ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது.
150 ரன்கள் இலக்கு:
துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43 வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையில் நடந்து வருகிறது. இதுவரை ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் கலந்து கொண்டுள்ள நிலையில், 4 முறை மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. தற்போது பிளே ஆப் சுற்றுக்குள் செல்லும் அணிகளிடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், ராஜஸ்தான் அணி இன்று கட்டாய வெற்றியை பெற வேண்டிய நிலையில் உள்ளது. மாலை 7:30 க்கு போடப்பட்ட டாசில் பெங்களூரு அணி டாசில் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 24 பேர் – தமிழக அரசு அறிக்கை!
இதனால் முதலில் ராஜஸ்தான் அணியினர் பேட்டிங் களத்தில் இறங்கினர். அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் லூயிஸ் இருவரும் இறங்கினார்கள். தொடக்க வீரர்களின் கூட்டணியே அபாரமாக அமைந்தது. லூயிஸ் 58 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டையும், ஜெய்ஸ்வால் 31 ரன்களையும் எடுத்து தனது விக்கெட்டை இழந்தனர். அதன்பிறகு வந்த வீரர்கள் யாரும் அந்த அளவிற்கு அதிக ரன்களை எடுக்கவில்லை.
வவ்வால் மாதிரிகளில் இருந்து நிபா வைரஸ் தடுப்பு மருந்து – கேரளா சுகாதாரத் துறை தகவல்!
பெங்களூர் அணியின் ஹர்சத் படேல் இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுளை எடுத்துள்ளார். நம்பிக்கை நாயகர்களான ராகுல் மற்றும் சகாரியா இருவரும் தலா 2 ரன்கள் மட்டுமே எடுத்து தங்களது ஆட்டத்தை இழந்துள்ளனர். ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணியினர் 149 ரன்களை எடுத்து ஆட்டத்தை இழந்தனர். இதனால் அடுத்து களம் இறங்கும் பெங்களூர் அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.