தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட்டிக்க கோரிக்கை:
இந்திய அளவில் தமிழக அரசு கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 911 பேர் பாதிக்கப்பட்டும் 9 பேர் உயிர் இழந்தும் உள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் குறைவாக பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கை நீட்டித்து விட்டன.
36 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு..!
எனவே தமிழகத்திலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவ குழுவினரும், அனைத்துக்கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் 7000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்