இந்தியாவில் 7000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000ஐ தாண்டி உள்ளது. இதனால் இன்று ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்தியா கொரோனா ரிப்போர்ட்:
இந்தியாவில் இதுவரை 7,447 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதில் ஒரே நல்ல செய்தி என்னவென்றால் இதுவரை 643 பேர் வைரஸின் தாக்கத்தில் இருந்து குணமடைந்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
மே 1 வரை ஊரடங்கை நீட்டித்த மாநிலம் – கொரோனா நடவடிக்கை தீவிரம்..!
ஆனால் மற்றொரு புறம் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரை கொரோனவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் 239 ஆக அதிகரித்து உள்ளது.
மாநில வாரியாக ரிப்போர்ட்:
- மஹாராஷ்டிரா – 1,574 பேர் பாதிக்கப்பட்டும் 110 பேர் உயிர் இழந்தும் உள்ளனர்.
- தமிழ்நாடு – 911 பேர் பாதிக்கப்பட்டும் 8 பேர் உயிர் இழந்தும் உள்ளனர்.
- டெல்லி – 903 பேர் பாதிக்கப்பட்டும் 13 பேர் உயிர் இழந்தும் உள்ளனர்.
- ராஜஸ்தான் – 553 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.
- தெலுங்கானா – 473 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5 நகரங்களுக்கு ரெட் அலர்ட்.! மத்திய அரசு அதிரடி.!
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்