தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் அரசு பணி வாய்ப்பு – விரைந்து விண்ணப்பித்து பயனடையுங்கள்!
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 200 விற்பனையாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்கள் அனைத்தும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர் பணியிடம்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் ரேஷன் கடைகளில் 200 விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிக்கு 12ம் வகுப்பு கல்வித்தகுதியை விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டும் என்றும், தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.6250 தொகுப்பூதியமாகவும், ஒரு வருடத்திற்கு பிறகு ரூ.8600 முதல் ரூ.29000 ஆக ஊதிய விகிதம் மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும், விண்ணப்பதாரர்கள் ஜூலை 1,2022 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், வகுப்பு வாரியாக அதிகபட்ச வயதிற்கான தளர்வுகளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர் பணிக்கு தேர்வுகள் எதுவும் இல்லாமல் நேர்முக தேர்வு மூலம் மட்டுமே ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LinkedIn பயனாளர்களுக்கு அருமையான அப்டேட் – போலி கணக்குகளை கண்டறிய புதிய வசதி!
Exams Daily Mobile App Download
அரசுப் பணியாளர் ஆணையத்தின் பணியாளர் நியமன விதிமுறைகளின் படியே ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.இப்பணிக்கு ரூ.150 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான விண்ணப்பங்களை 14.11.2022 மாலை 5:45 மணிக்குள் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.